கொரோனா தொற்று நோய் நெருக்கடியை அடுத்து பிரிட்டனில் மூடப்பட்ட மதுபானசாலைகள் சனிக்கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் மது அருந்துவோர் உரிய சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை என லண்டன் மாநகரின் பொலிஸ் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
மூன்று மாதங்களின் பின்னா் கடும் சுகாதார வழிகாட்டல்களுடன் மனுபானசாலைகளைத் திறக்க பிரிட்டனில் அனுமதி வழங்கப்பட்டது.
கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலையை தவிர்க்க மக்கள் அரசு விதித்திருந்த கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டுமென்று பிரிட்டன் பிரதமர் போரிஸ்ஜோன்சன் மற்றும் சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் குடித்துவிட்டு வருபவர்களால் நிச்சயம் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாது. அவர்கள் அவ்வாறு பின்பற்ற மாட்டார்கள் என்பதும் மிகவும் தெளிவாக தெரிகிறது என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்சின் பொலிஸ் கூட்டமைப்பு ஒன்றை சேர்ந்த ஜோன் ஆப்டர் தெரிவித்துள்ளார்.
மனுபானசாலைகள் திறக்கப்பட்ட வார இறுதி நாட்கள் மிகவும் பரபரப்பாக இருந்தன. எனினும் பொலிஸ் அதிகாரிகள் முடிந்தவரை திறன்பட சமாளித்தனர். சில பகுதிகளில் பிரச்னைகள் ஏற்பட்டு அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன எனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
லண்டன் உள்ளிட்ட பிரிட்டனின் பல இடங்களில் பெருந்திரளாக மக்கள் மதுபான விடுதிகளில் அருகருகே அமர்ந்து மது அருந்தும் ஏராளமான படங்கள் மற்றும் காணொளிகள் வெளியாகியுள்ளன. இவை பாதுகாப்பு குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக கூறப்படுகிறது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்